85 சதவீத கொரோனா இறப்புகள் இவர்களுக்கே நேர்ந்துள்ளது - மருத்துவர் படுவந்துடாவ
ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை பதிவான 85 வீதமான கொவிட்-19 இறப்புகளில் 6985 பேர் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நடத்திய பகுப்பாய்வு மூலம் இது தெரியவந்ததாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ரஞ்சித் படுவந்துடாவ இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 6985 மரணங்களில் 2261 நபர்கள் அல்லது 53 வீதமானோர் நீரிழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறினார்.
2202 பேர் அதாவது 52 வீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். வைரஸால் பாதிக்கப்பட்ட 1001 பேர் (24 வீதமானோர்) ஏற்கனவே இதயம் தொடர்புடைய நோய்களைக் கொண்டிருந்தவர்களாவர்.
உயிரிழந்தவர்களில் 800 பேர்(18 வீதமானோர்) நாட்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட அதேவேளை 445 பேர் (10வீதமானோர்) அஸ்மா நோயால் பீடிக்கப்பட்டவர்கள் என மருத்துவர் படுவந்துடாவ மேலும் குறிப்பிட்டார்.