கைக்குழந்தையுடன் தமிழகத்திற்கு சென்ற 8 இலங்கையர்கள்!
Refugee
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lankan Peoples
By Shankar
இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு மாதக் கைக்குழந்தை உட்பட 8 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
குறித்த, எட்டு பேரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மூன்றாம் மணல் திட்டு பகுதியில் படகு செலுத்துனர்களினால் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக கடலோர காவல்துறையினரால் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர் இன்று (21-08-2022) அதிகாலை மீட்கப்பட்டனர்.
மேலும், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US