கடந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேக நபர்கள் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 144 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட பணியகம்
அவர்களிடமிருந்து 130 கிராம் ஹெராயின்,159 கிராம் பனி, கஞ்சா 1725 கிலோ 900 கிராம், 211,804 கஞ்சா செடிகள், மாவா 05 கிலோ 525 கிராம்,மதன மோதக 121 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 589 சந்தேக நபர்களில் 05 சந்தேக நபர்களும் 04 போதைக்கு அடிமையானவர்களும் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 08 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 144 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 12 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும், 128 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.
கைரேகைகள் மூலம் 01 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.