702 இலங்கையர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு? வெளியான பரபரப்பு தகவல்
இந்தியாவை மையப்படுத்திய ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடையதாக கூறப்படும் 702 இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (01) திங்கட்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
மொஹமட் சம்சுடீன் என்ற ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை இந்தியாவின் அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்த நிலையில் அவரால் நடத்தப்பட்ட வட்சப் குழுவுடன் குறித்த இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த 702 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் நீதிமன்றின் கவனத்திற்குகொண்டு சென்றனர்.