வவுனியாவில் பெண்கள் உள்ளிட்ட குழுவிற்கு நள்ளிரவில் நடந்த அசம்பாவிதம் ; விசாரணைகள் தீவிரம்
வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

7 பேர் காயம்
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டம் பகுதியிலிருந்து நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு முச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் உட்பட அதில் பயணம் செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.