தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி: பெரும் சோக சம்பவம்!
திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் மூச்சுத் திணறல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (05-11-2023) மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி காய்ச்சல் மற்றும் சலி ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவத்தில் திருகோணமலை - அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 6 வயதான தினுகி சத்ஷரணி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக தடிமல் காய்ச்சல் ஏற்பட்டதாகவும், நெஞ்சில் சலி ஏற்பட்ட நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.