இரவு விருந்தில் 57 பேர் அதிரடியாக கைது!
முனுகம காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு (23) சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பார்ட்டி நடப்பதாக பமுனுகம காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குறித்த இடத்தை பொலிஸார் சுற்றி வளைத்து சோதனைநடத்தியபோது பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களும், இளம் பெண்களும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருந்ததாகவும், அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா ஆகியவற்றுடன் 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா
அங்கிருந்த பெண் சந்தேக நபர்கள் மற்றும் 34 ஆண் சந்தேக நபர்கள் என மொத்தம் 57 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பார்ட்டி நடந்த ஹோட்டல் உரிமையாளர் 3 கிராமும், 200 மில்லிகிராமும் கொண்ட ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சந்தேக நபர்களின் வயது 18 முதல் 35 வயது வரை உள்ள கொழும்பு புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் எனதெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.