5 பெண்கள் விவகாரம்; சிக்கிய முன்னாள் இராணுவ வீரர்!
திருமணம் செய்து கொள்வதாக 5 பெண்களை நம்ப வைத்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கடந்த இரு வருடங்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சிசிடி கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இரானுவ வீரர், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பத்திரிகைகளில் வெளியாகும் திருமணம் தொடர்பிலான விளம்பரங்களை மையபப்டுத்தி பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய சந்தேக நபர், தன்னை உயர் பதவியில் உள்ள ஒருவராக சித்திரித்து திருமணம் செய்து கொள்ளும் வாக்குறுதியை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.
குறித்த பெண்களுடன் நெருக்கமாக பழகியுள்ள சந்தேக நபர், தனது தாயாருக்கு புற்று நோய் எனக் கூறி அவர்களிடம் கைமாற்றுக்கு பணம் பெற்றுக்கொண்டு, அதனை திருப்பிக் கொடுக்காது இந்த மோசடிகளைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த சிசிடி அதிகாரிகள் 2 வருடங்களின் பின்னர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.