யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மூன்று நாடுகளின் முக்கியஸ்தர்கள்!
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றைய தினம் (14-12-2023) சுவிட்சர்லாந்து, ஜப்பான், மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் விஜயம் செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஸ்ரீ வால்ட், ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் இவ்வாறு விஜயம் செய்துள்ளனர்.
இவர்கள் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்துக்கான பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே.ஹெட்டியாராச்சியுடன் கலந்துரையாடல்களில், ஈடுபட்ட அவர்கள், நாடுகளுக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்புகள், சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.