திடீரென சுகயீனமுற்ற 21 மாணவர்கள் வைத்தியசாலையில்
21 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் திறப்பனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட அரிப்பு
நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரின் உடல் முழுவதும் திடீரென அரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சுகயீனமுற்ற மாணவர்கள் அனைவரும் அம்புலன்சில் மரதன்கடவல பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு ஒவ்வாமை அல்லது மயிர்க்கொட்டி உடலில் பட்டமையினால் மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.