கொழும்பில் 21 இந்திய பிரஜைகள் அதிரடியாக கைது
கொழும்பு புறநகர் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யபட்டுள்ளனர்.
இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்ததும், அவர்களது விசா காலம் முடிவடைந்த பின்னரும் கிருலப்பனையில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள், தரவு பகுப்பாய்வு மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதான இந்தியய பிரஜைகள் வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.