இலங்கையில் சில பிரதேசங்களில் 18 மணிநேரம் நீர் விநியோகத் தடை
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மின்சார விநியோகம் தடைப்படுதல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு விநியோகிக்கப்படும் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 8 மணி முதல் மறுநாள் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான 18 மணிநேரம் நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடை
பிரதேசங்கள் கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவலை நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பிரதேசங்கள் நீர் விநியோகத் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.