பிணையில் வந்தவரால் 13 வயது சிறுமி கடத்தல்; நடவடிக்கை எடுக்காத பொலிஸார்
திருகோணமலை- மூதூர் , புளியடிச்சோலை கிராமத்தைச் 13 சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 07ஆம் திகதி இரவு அதே பகுதியை வ்சேர்ந்த செல்வநாயகம் உதயன் (வயது 24) என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக 08ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை தங்கள் பிள்ளை தொடர்பாக எவ்வித தகவல்களும் இல்லை எனவும் கடத்தப்பட்டுள்ள தங்களது பிள்ளையை கண்டுபிடித்துத் தருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுமி கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் தரம் 8இல் கல்வி கற்றுவரும் மாணவி எனவும் தெரிய வருகின்றது.
இதேவேளை சிறுமியை கடத்தியதாக கூறப்படும் நவர் கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் குறித்த நபர் இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேவேளை குறித்த சிறுமி கடத்தப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் மூதூர் பொலிஸாரினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.