கோர விபத்தில் சிக்கி பெண் குழந்தை பலி
கொழும்பில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது. செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் குழந்தை ஒன்று படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.