சட்டவிரோத பூச்சிக்கொல்லி மருந்துடன் 02 சந்தேக நபர்கள் கைது
கல்பிட்டியில் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 02 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கல்பிட்டி, உச்சமுனைக்கு அப்பால் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, கடல் வழியாக பூச்சிக்கொல்லி மருந்தை கடத்திய 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருப்பதுடன், கடல் வழிகள் ஊடாக தீவுக்குள் சட்டவிரோதமான பொருட்கள் வருவதைத் தடுக்க வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜயா, உச்சமுனை கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றைக் கண்டறிந்து இடைமறித்தது. கடற்படையினர் டிங்கி படகில் தொடர்ந்து சோதனை நடத்தியதில், பூச்சிக்கொல்லி மருந்து நிரப்பப்பட்டிருந்த 16 சந்தேகத்திற்கிடமான சாக்குகளை கண்டுபிடித்தனர்.
பூச்சிக்கொல்லி கையிருப்பில் 4000 குப்பிகள் (100மிலி) மற்றும் 6534 பாக்கெட்டுகள் (10 கிராம்) இருந்தன.
இந்த நடவடிக்கையின் மூலம் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அந்த பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கல்பிட்டி வன்னிமுந்தலம பிரதேசத்தில் வசிப்பவர்கள், 33 மற்றும் 44 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவர் (02) டிங்கி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துப் பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.