சிவபெருமானுடன் ஆன்மரீதியாக பிணைக்கப்பட்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
இந்து மதத்தின் முக்கியமான கடவுளென்றால் அது அழித்தலின் கடவுளான சிவபெருமான்தான். மகா சிவராத்திரி வரவிருக்கும் சூழலில் சிவபெருமானின் அருளைப் பெறுவது எப்படியென்று தெரிந்து கொள்வது அவசியம்.

ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் சிவபெருமானுடன் இப்படிப்பட்ட ஆன்மரீதியான தொடர்பைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள், செவ்வாய் நெருப்பின் ஆற்றலைக் கொண்டது. சிவபெருமானும் மேஷ ராசிக்காரர்களைப் போலவே உக்கிரமான ஆற்றலைக் கொண்டவர். எனவே, அவர்கள் பொதுவாக கால பைரவர் போன்ற சிவனின் உக்கிரமான ஆற்றலை நோக்கி இயல்பிலேயே ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் சிவபெருமானை மிகுந்த பக்தியுடன் வணங்குகிறார்கள், அவரிடமிருந்து தைரியத்தையும் வலிமையையும் பூரணமாக பெறுவதற்கு எப்போதும் சிவபெருமானை வழிபடுகிறார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள், சந்திரன் சிவபெருமானின் தலையில் அலங்காரப் பொருளாக அமர்ந்திருக்கிறார். அதே குணங்கள் கடக ராசிக்காரர்களிடமும் இயல்பாகவே அமைந்துள்ளன. அவர்கள் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்புகளுக்கும் ஆளாவதால், அவர்கள் எப்போதும் சிவபெருமானால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் சிவபெருமானுடன் உரையாடி, தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான சவால்களை அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சிவபெருமானை அவர்களுக்கு நெருங்கிய நண்பர்தான்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள், மேலும் அவர்கள் தங்களுக்குள் ஒரு சக்திவாய்ந்த நெருப்பு போன்ற ஆற்றலைக் கொண்டுள்ளனர். விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் சிவபெருமானின் தியான குணத்தால் ஈர்க்கப்படுகிறார்கள், சிவபெருமானை வழிபடுவது அவர்களின் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் அளிக்கிறது. கண்களால் பார்க்க முடியாத, ஆனால் உணரக்கூடிய விஷயங்கள், அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அல்லது உருமாற்றம் மற்றும் மறுபிறவி பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அவர்கள் தீராத ஆர்வம் கொண்டவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ரகசியமானவர்கள், மேலும் அவர்கள் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் ஆறுதலையும் அமைதியையும் பெற முயற்சிக்கிறார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனிபகவானால் ஆளப்படுகிறார்கள், சிவபெருமானின் தீவிர பக்தரான சனிபகவானும் அமைதியையும், சாந்தத்தையும் விரும்பும் ஒரு மெதுவாக நகரும் கிரகமாகும். அவர்களைப் போலவே கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள், மேலும் சிவபெருமான் எப்போதும் தன்னுடனேயே இருந்து, அவருடைய ஆற்றலால் தங்களை ஆசீர்வதிப்பதாக நம்புகிறார்கள். எனவே, மற்றவர்களுக்கும் அமைதியை வழங்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கண்களை மூடி தியானித்து சிவனை வழிபடுகிறார்கள், அவர்கள் கோவிலுக்கே சொல்லாவிட்டாலும், ஈசன் எப்போதும் அவர்களுக்குள்தான் இருக்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
