நீதிமன்றில் சஹ்ரானின் மனைவி ; விசாரணை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று(2) விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் குண்டுதாரி
கல்முனை மேல் நீதிமன்றத்தில், உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா, நீதிபதி முன்னிலையில் செப்டம்பர் 1 மற்றும் 2, 2025 ஆகிய இரு நாட்கள் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு விசாரணையின் போது, நிகழ்ச்சி குறிப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து ஆராயப்பட்டது.
நிகழ்ச்சி குறிப்புகளில் திருத்தங்களை மேற்கொள்ள நேரம் கருத்தில் கொண்டு, வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.