சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை; சொர்க்கத்தில் என் தாய் பார்த்துக்கொள்வார்...உருகவைக்கும் பதிவு
யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒழுங்காக படிக்கவில்லை என அவரின் தாய் கண்டித்ததால் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொர்க்கத்தில் என் தாய் மகனை பார்த்துக்கொள்வார் என சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
டிவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த சவுக்கு சங்கர் யுடியூப்பில் தொடர்ந்து அரசியல் தொடர்பான விவாதங்களை செய்து வந்தார்.
குறிப்பாக 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
2026 தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தபின் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசி வருகிறார்.