திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிய இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; வெளிநாட்டு தம்பதியினரால் விபரீதம்
தம்புள்ளை - வாவலவெவ பிரதான வீதியில், கண்டலம குளக்கட்டின் மீது பயணித்த ஜீப் வண்டி ஒன்று குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் இந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கட்டுப்பாட்டை இழந்து விபத்து
வாவலவெவ பகுதியிலிருந்து தம்புள்ளை நோக்கி குளக்கட்டின் மீது வெளிநாட்டு தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள் ஜீப் வண்டிக்கு நேராக வந்ததால், ஜீப் வண்டியை திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து சரிவில் இரண்டு முறை புரண்டுள்ளது.
அவர்கள் சவப்பெட்டியில் தான் திரும்புவார்கள் ; ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பெரும் படைக்கு பறந்த எச்சரிக்கை
இறுதியில் குளத்தின் நீர் மட்டத்திற்க்கு அருகிலிருந்த கருங்கல் ஒன்றில் மோதி வாகனம் நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தம்புள்ளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.