இலங்கை நாடாளுமன்றத்தை வீடியோ எடுத்த யாழ்.இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
இலங்கை நாடாளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் காணொளி எடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (29-01-2023) மாலை நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்றும் மற்றையவர் முஸ்லிம் இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியின் ஊடாக தியவன்னா ஓயா பகுதிக்கு வந்து, அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியை காணொளி எடுத்துள்ளதாக நடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தலங்கம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.