ஒரே வீட்டில் 6 ஆண்டுகளாக குடித்தனம் ; இறுதியில் திருநங்கைக்கு காதலன் நடத்திய பயங்கரம், வெளியான பகீர் பின்னணி
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஒருவருடன் வசித்தவர் ஒருவர், திருநங்கை ஆவார். இவரது சொந்த ஊர் பல்லாரி மாவட்டம் ஜாகனூரு ஆகும்.
சேகரின் சொந்த ஊர் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா மல்லனகுடி கிராமம் ஆகும். ஆட்டோ டிரைவரான குறித்த நபருடன் தங்கியிருந்தவர் திருநங்கை என்று தெரிந்தும், அவரை காதலித்து வந்துள்ளார்.

தகராறு
மேலும் கடந்த 6 ஆண்டுகளாக ஒரே வீட்டில் 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டின் ஜன்னல் கம்பியில் இருவரும் பிணமாக தொங்கினார்கள். இதைப்பார்த்து சக திருநங்கைகள் அதிர்ச்சி அடைந்து புரூஸ் பேட்டை பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில், விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில், திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்தது அவரது பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவரது பெற்றோர் மணப்பெண் தீவிரமாக தேடி வந்தனர். இந்த தகவல் சுஹாசினிக்கு தெரிய வந்தது. இதனை சேகரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று கனக துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிறகு வீட்டிற்கு வந்தனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சேகர் சுஹாசினியை சேலையால் இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் அவரும் வீட்டு ஜன்னலில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து புரூஸ்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.