திருகோணமலையில் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல்

Sri Lanka Police Trincomalee
By Sahana Apr 02, 2025 12:24 AM GMT
Sahana

Sahana

Report

திருகோணமலை நிலாவெளி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பிடிப்பதற்காக சென்ற இரு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, இளைஞர் குழுவொன்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசத்தல் செயல் ; உலக சாதனை முயற்சியில் பெற்றோர்

யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசத்தல் செயல் ; உலக சாதனை முயற்சியில் பெற்றோர்

நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (31) தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் நிறுத்த முயன்ற நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துநருக்கு ஆதரவாக அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர் குழு ஒன்று பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

திருகோணமலையில் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல் | Youth Group Attacks Police Obstructing Duties

சம்பவத்தில் பொலிஸார் மற்றும் இளைஞர் குழுவுக்கிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதுடன், குறித்த குழுவினர் சீருடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி சைக்கிள் செலுத்துநரை பிடித்திருந்த அதிகாரிகளை அக்குழுவினர் வீதியிலிருந்து வீடொன்றினுள் இழுத்துச் சென்று அடைத்து தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தொலைபேசியும் அவ்விளைஞர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல் | Youth Group Attacks Police Obstructing Duties

இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனத்துங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நிலாவெளி பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்த ஒரு குழுவினர் தகாத வார்த்தைகளால் பேசி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. நிலாவெளி பகுதியில் மார்ச் 31 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. 10 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அவர்களை தடுத்து தாக்கியுள்ளனர்.

யாழ் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைச் சட்டக் கோவைக்கமைய தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நாட்களில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

யாழில் நேர்ந்த துயரம் ; மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

யாழில் நேர்ந்த துயரம் ; மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US