தமிழர் பகுதியொன்றில் இரவில் கற்களுடன் கைதான இளைஞர்கள் ; காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
புத்தளம் - மதுரங்குளி நகரில் தொல்பொருட்கள் மற்றும் வாகனத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளி பொலிஸ் அதிகாரிகளினால் நேற்று (09) இரவு முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனையின் போது, மதுரங்குளி நகரப் பகுதியில் வைத்து கார் ஒன்று சோதனையிடப்பட்டது.
[00DCBK]
மேலதிக விசாரணை
இதன்போது சுமார் ஒன்றரை அடி உயரமான, கல்லினால் செதுக்கப்பட்ட தாமரை மலர்ச் சிற்பம் மற்றும் சுவஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்ட பேழை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன.
அந்தப் பேழைக்குள் பெறுமதியான மாணிக்கக் கற்கள் என சந்தேகிக்கப்படும் சில கற்களும் காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக கல்கமுவ மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்த 22, 30, 32 மற்றும் 47 வயதுடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மதுரங்குளி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றன