ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
அநுராதபுரம் சாலியபுர பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்டவர், 29 வயதுடைய அநுராதபுரம் ஹிதோகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடம் இருந்து 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.