யாழ்.இளம் வீராங்கனையின் உயிரை பறித்த கொடிய நோய்! சோகத்தில் அப்பகுதி
அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனையும், யாழ்.தேசிய மட்ட வீராங்கனையுமான கொடிய நோயால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இவர் மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle என பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
யாழ்.அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான காவேரி பிரதீபன் மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற கொடிய இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2020 ஆண்டு மேலதிக வைத்திய சிகிச்சைக்காக இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
இதையடுத்து, இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை, பலனின்றி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது சடலம் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.