28 வயதான இளம் இசையமைப்பாளர் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!
தென்னிந்தியாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் இன்றையதினம் காலாமானார். அவரது மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021-ஆம் ஆண்டு கிட்டு இயக்கத்தில் வெளியான மேதகு படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரவீன் குமார் அறிமுகமானவர்.
இதைத்தொடர்ந்து இராக்கதன், மேதகு -2 , கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்தார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கிசிச்சை பலனின்றி இன்று (02-05-2024) உயிரிழந்துள்ளார்.
இவ்வளவு சிறு வயதிலே ஒருவர் காலமானது மக்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மறைந்த இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.