மாடியேறிய இளம் தாய்க்கு நேர்ந்த துயரம் ; வீடுதிரும்பிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கம்பளை பிரதேசத்தில் வீட்டின் மேல் மாடிக்குத் துணிகளை எடுப்பதற்காகச் சென்றிருந்த இளம் தாய் ஒருவர் வழுக்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கம்பளை, நாராங்விட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதான இரு பிள்ளைகளின் தாயே நேற்று (15) உயிரிழந்துள்ளார். பெண்ணின் கணவன் வேலைக்குச் சென்றுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் தாய்
மூத்த மகன் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை க்குச் சென்ற நிலையில், இளைய மகன் தந்தைக்கு உணவெடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், மதியம் மழை பெய்தபோது, மேல் மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காகத் தாய் சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பரீட்சை எழுதச் சென்றிருந்த மகன், வீடு திரும்பியவேளை தாயைத் தேடியபோது தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தந்தைக்கும், அயலவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் சமபவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.