யாழின் தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ள சாவகச்சேரி பற்றிய தொகுப்பு!
சாவகச்சேரி இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றப் போது சாவகச்சேரி நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் பல உக்கிர சண்டைகள் நடைபெற்றன. 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது சாவகச்சேரியும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.
2000 ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது புலிகள் சாவகச்சேரியைக் கைப்பற்றிய போதும் பின்னர் பின்வாங்கிச் சென்றனர்.
இலங்கை தொடருந்து வலையமைப்பில் நாவற்குழி, மீசாலை தொடருந்து நிலையங்களுக்கிடையில் சாவகச்சேரி அமைந்துள்ளது. எனினும் தொடருந்து போக்குவரத்து போரின் காரணமாக இடைநிறுத்தப்பட்டு 2014ம் ஆண்டிலிருந்து மீண்டும் இடம்பெறுகிறது.