விமானத்தின் இறுதி நொடி; தலைமை விமானியிடமிருந்து வந்த பதற வைக்கும் கடைசி வார்த்தைகள்
குஜராத்தின் ஆமதாபாதில் நேற்று 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' போயிங் 787 - டிரீம் லைனர் விமானம், கீழே விழுந்து வெடித்தில் 241 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விமானத்தின் தலைமை விமானியிடமிருந்து வந்த கடைசி வார்த்தைகள் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
மே டே கால்
ஏர் இந்தியா விமானம் , புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விமானியிடமிருந்து மே டே கால் எனப்படும் அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், பல முறை குறித்த வார்த்தை உச்சரிக்கப்பட்தாகவும் சில நொடிகளின் பின் குறித்த தொடர்பு தடைப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர அழைப்பு விடுக்கப்பட்டதும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோதும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மே டே என்ற சொல்லானது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த மேஎய்டர் என்ற சொல்லாகும்.இதற்கு உதவி செய்யுங்கள் என்று அர்த்தமாகும். இந்த அழைப்பு வந்ததும், கட்டுப்பாட்டு அறைகள் துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த விபத்தில் அனைத்து பயனற்று போனதுடன் இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.