நவராத்திரியின் ஆறாம் நாள் வழிப்பாட்டு முறை
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்க்கையின் பல்வேறு வடிவங்களை வழிபடுவது பாரம்பரியமாக உள்ள வழக்கம்.
மலை மகள், அலை மகள், கலை மகள் என்ற வரிசையில் முப்பெரும் தேவியர்களையும் நாம் வழிபடுவதுண்டு.
முதல் மூன்று நாட்களும் மலைமகளான துர்கா தேவி அல்லது பார்வதி தேவியை வழிபட வேண்டும்.
அடுத்த மூன்று நாட்களில் அலை மகளான செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும்.
மத்தியில் உள்ள மூன்று நாட்களும் முறையாக, பக்தியுடன் நாம் வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் மட்டுமன்றி அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும்.
இந்த மூன்று நாட்களில் முதல் நாளில் மகாலட்சுமி தேவியாகவும், அடுத்த நாள் மோகினி அல்லது வைஷ்ணவி தேவியாகவும் அலைமகளை வழிபட்டோம்.
மகாலட்சுமி வழிபாட்டிற்குரிய இறுதி நாளாகிய நவராத்திரியின் ஆறாம் நாள் எவ்வாறு மகாலட்சுமி தேவியை வழிப்படுவது குறித்து அறிந்துக்கொள்வோம்.
ஆறாம் நாள் வழிப்பாட்டு முறை
நவராத்திரியின் ஆறாம் நாள் வழிப்பாட்டின் போது கிளிப்பச்சை நிறத்திலான ஆடையினைக் கொண்டு சண்டிகா தேவி அலங்காரம் செய்ய வேண்டும்.
செம்பருத்தி மலர் சந்தன இலை என்பவற்றைக் கொண்டு தேங்காய் சாதம் பச்சைப் பயறு சுண்டல் ஆரஞ்சு பழம் என்பனவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிப்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
ஆறாம் நாள் வழிப்பாட்டின் போது கடலை மாவினால் தேவியின் திருநாமத்தை கோலமிடுவதோடு நீழலாம்பரி ராகம் இசைக்கப்பட வேண்டும்.
நவதுர்க்கை வழிப்பாடு
நவராத்திரியின் ஆறாம் நாளில் நவதுர்க்கைகளில் காத்யாயனி தேவியை வழிபட வேண்டும். வாள், தாமரை, சக்கரம், சங்கு என ஏந்தி நான்கு திருக்கரங்களுடன், சிங்கத்தின் மீது பவனி வரும் இந்த தேவிபலம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக விளங்கக் கூடியவள்.
இந்த தேவியை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். இந்த நாளில் காத்யாயனி தேவியை வழிபடுபவர்கள் அனைத்து விதமான தடைகளில் இருந்தும் வெளி வருவார்கள். இந்த நாளில் பக்தர்கள் பலர் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
கிடைக்கப்பெறும் அனுகூலங்கள்
நவராத்திரியின் ஆறாம் நாளில் அம்பிகையை சண்டிகா தேவி ரூபத்தில் வழிபடுபவர்களுக்கு வழக்குகளில் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். நோய்கள், துயரங்கள் நீங்கும். வெளிநாடு தொடர்பான வேலைகள் கைகூடி வரும். ஜென்மாந்திர பாவங்கள் நீங்கும்.