கொரோனாவை தொடர்ந்து மற்றுமொரு நோய்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உலகளவில் குரங்கம்மை வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோயாகும்.
இது சின்னம்மையைப் போன்ற அரிய தொற்றுநோயாக கருதப்படும் நிலையில் , சின்னம்மையைவிட சற்று குறைவான தாக்கத்தைக் கொண்டது. காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை இந்த தொற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ், தோலின் மேற்புறத்தில் உள்ள உடைந்த உயிரிகள் மூலமாகவும், சுவாசக் குழாய் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. அத்துடன் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் உள்ள மியூகோஸ் திசுக்கள் மூலமாக பரவக்கூடும்.
அதேசமயம் கோவிட் தாக்கம் குறைவடையத் தொடங்கியுள்ள நிலையில், கனடா, பிரிட்டன், பெல்ஜியம், ஒஸ்ரேலியா ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.