ஒரே நேரத்தில் இரு தடுப்பூசி பெற்ற பெண்; நேர்ந்த சோகம்
கண்டி − பேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரு தடவைகள் மொடர்னா கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, குறித்த பெண் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடபேராதனை கொவிட் தடுப்பூசி நிலையத்தில், இந்த சம்பவம் நேர்ந்துள்ள நிலையில் குறித்த பெண் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேராதனை ஒகஸ்டாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாரு பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர், பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.