சாலையில் நடந்து சென்ற பெண்: நிர்வாணமாக வந்த நபர்: அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தானில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் நிர்வாணமாக வந்த நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் ஜுலிஸ்தன் இ ஹகர் என்ற பகுதி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இ ஹகர் என்ற பகுதி உள்ள ஒரு தெருவின் சாலையில் நேற்று முன்தினம் இளைஞன் ஒருவர் பைக்கில் வந்தார்.
சாலையோரம் பைக்கை நிறுத்திய அந்த இளைஞன் தன் ஆடையை கலைந்து நிர்வாணமாகியுள்ளார்.
இதனிடையே, அந்த தெருவில் உள்ள ஒரு பெண் பர்தா அணிந்தவாறு நடந்து சென்றுள்ளார்.
இதன்போது, அந்த இளைஞன் நிர்வாணமாக அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் திடீரென அந்த பெண்ணிடம் இளைஞன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞனை தாக்கிய நிலையில் அந்த இளைஞன் தனது ஆடையை அணிந்துகொண்டு வேகமாக பைக்கில் புறப்பட்டு சென்றார்.
Unknown man followed a girl on street and assaulted during day light. According to the reports, that area is Gulistan e Johar block 4, K.D.A scheme 36. Reportedly, there was no number plate on the bike.#TOKAlert #Karachi pic.twitter.com/dbibXvhGJT
— Times of Karachi (@TOKCityOfLights) July 4, 2023
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் அந்த இளைஞன் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த இளைஞனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.