சூரிச் விமான நிலையத்தில் சிக்கிய பெண்: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சுவிஸில் சூரிச் விமான நிலையத்தில் சோதனை பணியில் ஈடுபட்டுவந்த காவல்துறையினர், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 73 வயது பெண்மணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த பெண்மணியிடம் சோதனை மேற்கொண்டபோது, அவரிடமிருந்து 4 கிலோ அளவிலான கோகோயின் போதை பொருள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
குறித்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி, Sao Paulo என்ற பகுதியிலிருந்து, சூரிச் வழியே ஆம்ஸ்டர்டாம் பகுதிக்கு செல்ல தயாராக இருந்துள்ளார்.
இந்நிலையில் தான் சூரிச் விமான நிலையத்தில் காவல்துறையினரிடம் பிடிப்பட்டுள்ளார். மேலும் குறித்த பெண்ணை போதைப்பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிற்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை மேற்கொண்ட பின்பு த்கவல்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.