கடற்கரையில் பெண்ணின் சடலம்; பொலிஸார் விடுத்த கோரிக்கை(Photos)
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலம் தொடர்பாக பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உடற்கூற்று பரிசோதனை
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அங்கு வருகை தந்த சாய்ந்தமருது பொலிஸார், கல்முனை கடற்படையினருடன் இணைந்து கடலில் மிதந்த சடலத்தை மீட்டனர்.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தால் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.