வீதியைக் கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி உயிரிழப்பு
காலி - மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாவத்தை துறந்து சாமியாராக நினைத்தவர் செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ; கிணற்றுக்குள் கிடந்த பிறப்புறுப்பு
குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய, கட்டுவன பகுதியைச் சேர்ந்த சுமார் 65 வயதுடைய பெண் ஆவார்.

விபத்தில் உயிரிழந்த பெண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நேற்று (30) இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காலி, பத்தேகம பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து மீண்டும் எம்பிலிபிட்டிய பகுதியை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவர்கள் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு, வீதியைக் கடந்து கடற்கரைக்குச் செல்ல முயன்ற போதே, குறித்த பெண் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.