போர்வீரர் நினைவுத் தூபியில் அத்துமீறல் ; பொலிஸிற்கு அழைக்கப்பட்ட விமல் வீரவன்ச
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு நாளை (22) முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தலங்கமபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சட்ட நடவடிக்கை
கடந்த 18ஆம் திகதி, விமல் வீரவன்ச மற்றும் ஒரு குழுவினர் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குற்றவியல் செயற்பாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் காவல்துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பணிப்புரைக்கமைய குறிப்பிட்ட நேரத்தில் அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகத் தவறினால், அவருக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.