அடுத்த மாதம் விமல் வீரவன்ச வழக்கு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றி வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடர்பில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.