கைது செய்யப்படுவாரா விராட் கோஹ்லி!
பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து காரணமாக விராட் கோஹ்லி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஆர்.சி.பி அணி முதல்முறையாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் கிண்ணத்தை வென்றது.
வெற்றி கொண்டாட்டம்
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி திடலில் கூட்டம் கூடியது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக, ஏற்கனெவே ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில். இந்தக் கூட்ட நெரிசலுக்கும் விராட் கோஹ்லிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் புகாரினை ஏற்கனவே இருக்கும் புகார்களின் கீழ் விசாரிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விராட் கோஹ்லி தூண்டியதால் தான் இந்த அளவுக்கு கூட்டம் கூடியதாக அந்தப் புகாரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் 14 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை கோஹ்லி லண்டனுக்குச் சென்றதாக தகவல் வெளியான நிலையில் இந்தப் புகாரினால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.