இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதில்லை!
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்போவதில்லை எனவும், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமது நாட்டின் இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் மாத்திரமே இடம்பெற்றதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதல் ஈரானின் மத்திய மாகாணத்தில் உள்ள இஸ்பஹான் பகுதியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இஸ்ரேலுக்கு சொந்தமான 3 ஆளில்லா விமானங்கள் தங்கள் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், வேறு எந்த தாக்குதலும் தங்கள் நாட்டின் மீது நடத்தப்படவில்லை எனவும் ஈரான் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள தனது தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.