கலியுகத்தில் இதெல்லாம் நடக்குமா? விஷ்ணு புராணம் சொல்லும் கணிப்புகள்
கலியுகத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கும், அவர்களின் வாழ்நாள், தோற்றம், இயற்கையின் நியதிகளில் ஏற்படும் மாற்றங்களால் மனித வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் விஷ்ணு புராணங்களில் பல குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு முக்கியமான நிகழ்வு அதன் அடையாளமாக இருக்கும். திரேதா யுகத்தில் ராமர் வாழ்ந்த வாழ்க்கை அந்த யுகத்தின் அடையாளம். துவாபர யுகம் மகாபாரதத்திற்காக அறியப்படுகிறது. துவாபர யுகத்திற்குப் பிறகு கலியுகம் வருகிறது.
கலியுகத்தில் யார் பலசாலியாக இருக்கிறார்களோ, அவர்களே எல்லாவற்றிற்கும் தலைவனாக இருப்பார்கள். அதாவது, பணம், உடல் வலிமை, புகழ் உள்ளவர்களே பலசாலியாக கருதப்படுவார்கள். இப்படிப்பட்ட பலசாலி எல்லா குடும்பத்திலும் சிறந்தவராக கருதப்படுவார். இவர்களின் சொற்படியே உலக இயக்கங்கள் நடைபெறும். இவர்களின் சொற்களே சட்டங்களாக இருக்கும்.
உடல்நலக் குறைபாடுகள்
12 வயதிலேயே மக்களுக்கு நரை முடி வரும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. 12 வயதிலேயே முடி நரைக்க ஆரம்பிக்கும். 20 வயதிற்குள் பல நோய்கள் வந்துவிடும். இதனால், அவர்களின் ஆயுட்காலம் குறையும். மிக இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எட்டுவார்கள். பல விதமான நோய்களின் தாக்கம், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக இளம் வயதிலேயே மரணமடைவார்கள்.
மனிதர்களின் உயரம் குறையும்
கலியுகம் உச்சத்தில் இருக்கும் போது, மனிதர்களின் சராசரி உயரம் மிகவும் குறைந்து விடும். இப்போது மனிதர்களின் சராசரி உயரம் 5.5 அடி முதல் 6 அடி வரை இருக்கிறது. ஆனால், கலியுகம் உச்சம் அடையும் போது இது 4 இன்ச் ஆக குறைந்துவிடும். கலியுகம் முடியும் நேரத்தில் மனிதர்களின் உயரம் இன்னும் குறைந்துவிடும்.
6 வயது சிறுமிகளுக்கு குழந்தை பிறக்கும்
கலியுகத்தில் மனிதர்களின் ஆயுட்காலம் 12 முதல் 20 ஆக குறைவதால், குழந்தை பெறும் வயதும் குறைந்துவிடும். 6-7 வயது சிறுமிகளும், 8-9 வயது சிறுவர்களும் சேர்ந்து குழந்தைகளை பெறுவார்கள். இதனால், இயற்கையின் நியதியும் மாறும்.