புத்தளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... இரவில் அச்சத்தில் இருக்கும் மக்கள்!
புத்தளம் - கோம்பகஹவெவ கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீடு ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்றையதினம் (06-09-2024) அதிகாலை மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோம்பகஹவெவ கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பாரிய சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டை உடைத்து , வீட்டில் இருந்த நெல் மூடைகளை வெளியே எடுத்ததாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.
வீட்டிலிருந்த தாம் பாரியளவில் கூச்சலிட்ட போது அயலவர்கள் அங்கு வருகை தந்து குறித்த காட்டு யானையை விரட்டியடித்ததாகவும் வீட்டின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மஹகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இரவானதும் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே காட்டு யானைகளை இப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.