யாழில் கணவர் முடிவால் அதிர்ச்சியில் மனைவி
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் இன்று (30) காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவரும் அவரது மனைவியும் சம்பவம் நிகழ்ந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவரது மனைவி இன்றைய தினம் காலை வெளியே சென்றிருந்தவேளை முதியவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் முதியவரின் விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.