துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில்; மேலதிக தகவல்
மாத்தறை - மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் "கஜ்ஜா" என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதோடு உயிரிழந்தவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனைவி வெளிநாட்டில்
இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் உள்ள நிலையில் , தனது இரண்டு பிள்ளைகளுடன் குறித்த நபர் வசித்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆறு வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 39 வயதான கஜ்ஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.