புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Sahana Dec 17, 2025 07:23 AM GMT
Sahana

Sahana

Report

 மட்டக்களப்பு வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் தாக்குதலில் 46 வயது கணவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர கொலை சம்பவம் ; சந்தேக நபரின் வீடு தீக்கிரை

நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர கொலை சம்பவம் ; சந்தேக நபரின் வீடு தீக்கிரை

கணவரின் நீண்டகால துன்புறுத்தல்களே, சம்பந்தப்பட்ட பெண்ணை பொறுமை இழந்து அந்த கடுமையான செயலில் ஈடுபடச் செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

குறித்த பெண்ணின் கணவர் மதுபோதைக்கு அடிமையாக இருந்து, தினந்தோறும் மனைவியை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள் | Wife Murder After Husband Asks Pudding Revealed

இதன் காரணமாக அவர் தொடர்ந்து வன்முறைக்கு உள்ளாகியுள்ளதாகவும், கடந்த காலத்தில் ஏற்பட்ட தாக்குதல்களால் காது கேளாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, கணவரால் துன்புறுத்தப்படுவதாக பெண் பொலிஸாரிடம் முறையிட்டிருந்ததாகவும், உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த முறை கணவரை கொலை செய்துவிட்டே வருவேன் என அவர் மன வேதனையுடன் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக வெளிப்பார்வைக்கு அமைதியான நபராகவே கணவர் காணப்பட்டிருந்தாலும், மதுபோதை அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புட்டு கேட்ட கணவனை அடித்து கொன்ற மனைவி ; பொலிஸாரின் விசாரணைகளில் பல தகவல்கள் | Wife Murder After Husband Asks Pudding Revealed

இதன் மூலம், குடும்பத்துக்குள் மறைந்திருக்கும் வன்முறைகள் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் வெளிப்படுகிறது.

இந்த சம்பவம், தனிப்பட்ட குற்றச்செயலாக மட்டுமல்லாமல், குடும்ப வன்முறை, மதுபோதையின் தீவிர விளைவுகள் மற்றும் கணவன்–மனைவி உறவுகளில் பரஸ்பர புரிந்துணர்வு இல்லாமை போன்ற சமூக பிரச்சினைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

கணவன்–மனைவி இடையே எழும் கருத்து வேறுபாடுகள், வெளியில் அல்லாது குடும்ப எல்லைக்குள் கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டியவை என சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சி ; கொட்டி தீர்க்க போகும் கனமழை

நாட்டில் அலை வடிவிலான காற்றுப்பெயர்ச்சி ; கொட்டி தீர்க்க போகும் கனமழை

பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் விட்டுக்கொடுப்பு இல்லாதபோது, அதன் பாதிப்பு இறுதியில் பிள்ளைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் நிலை உருவாகும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில், நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பம் இன்று தந்தையற்ற நிலைக்கும், தாயை சிறையில் காணும் துயர நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், குடும்ப வன்முறையும் மதுபோதையும் ஒரு குடும்பத்தின் முழு எதிர்காலத்தையே சிதைக்கக் கூடியது என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்த வேன் ; மயிரிழையில் உயிர்தப்பிய யுவதிகள்!

வீதியில் இருந்து விலகி ஆற்றில் பாய்ந்த வேன் ; மயிரிழையில் உயிர்தப்பிய யுவதிகள்!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US