வீண் பழி சுமத்திய மனைவி: கணவன் எடுத்த விபரீத முடிவு! இலங்கையில் பரபரப்பு சம்பவம்
பொல்பித்திகமவில் மனைவி தன்மீது வீண் பழி சுமத்தினார் என்பதற்காக அவரது கணவன் தனது ஆணுறுப்பைக் அறுத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை வெளியே சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது மனைவி வழிதவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி கணவர் மீது குற்றம் சுமத்தியபோது அவர் வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவர் தனது ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.
இந்த நிலையில், வெட்டுக்காயங்களுடன் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.