மேற்கிலிருந்து சென்றோர் வடக்கில் சிக்கினர்!
மேல் மாகாணத்தைச் சேர்ந்த 5 பேர் வவுனியாவில் வைத்து விசேட அதிரடிப்படையினரால், கைது செய்யப்பட்டனர்.
வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை ஆய்வு செய்யப் பயன்படும் ஸ்கேனர் இயந்திரத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைதாகியுள்ளனர்.
வவுனியா - மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கெப் வாகனம் ஒன்று நேற்று சோதனையிடப்பட்டது.
இதன்போது வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கேனர் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர், அவர்களை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதில், பியகமவைச் சேர்ந்த 4 பேரும், பிலியந்தலயைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.