எதிர்க்கட்சியில் இருக்கையில் சண்டியர்கள்... இன்று நொண்டியர்கள்; நாடாளுமன்றில் சீறிய எம்பி!

Parliament of Sri Lanka MP Chamara Sampath Dassanayake NPP Government
By Sulokshi Jan 07, 2026 04:50 AM GMT
Sulokshi

Sulokshi

Report

    எதிர்க்கட்சியில் இருக்கும்போது சண்டியர்களாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு வந்ததும் நொண்டியர்களாக மாறிவிட்டனர் என புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

நேற்று (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்க்கட்சியில் இருக்கையில் சண்டியர்கள்... இன்று நொண்டியர்கள்; நாடாளுமன்றில் சீறிய எம்பி! | While In The Opposition Bullies Are Now Cripples

இந்த அரசாங்கம் மரங்கொத்தி பறவை போன்று

வெனிசியூலா பிரச்சினை 2018ஆம் ஆண்டு காலத்தில் வந்தபோது தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் அப்போது அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் சென்று சுற்றிவளைத்தனர்.

ஆனால் இப்போது அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் சென்று இவர்களின் வேறு தரப்பினரே சுற்றி வளைத்தனர். இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது சண்டியர்களாகவும் அரசாங்கத்தில் இருக்கும்போது நொண்டியர்களாகவும் இருக்கின்றனர்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

இவர்களால் இப்போது எதுவும் பேசமுடியாமல் இருக்கின்றனர். இதேவேளை, கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் நாங்கள் பிரதமரை அவமதிக்கும் வகையில் எதனையும் கூறப் போவதில்லை.

இந்த பிரச்சினையில் தவறு எங்கே நடந்துள்ளது என்பதல்ல விடயம். கெஹேலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சைக்குரிய மருந்து ஊசிகளை இறக்குமதி செய்திருந்தாலும் அவற்றை நோயாளர்களுக்கு செலுத்தியவர் அவரல்ல.

ஆனால் சிறைக்கு அவரே சென்றார். அதேபோன்றுதான் பிரதமருக்கும் இதில் பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பிக்க முடியாது. நான் சிறைக்குச் சென்ற விடயத்திலும் அதிகாரிகளே வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றனர்.

வீதி விளக்குகளுக்கான கட்டணங்களை இனி மக்களே செலுத்த வேண்டும் ; தயாராகும் திட்டம்

வீதி விளக்குகளுக்கான கட்டணங்களை இனி மக்களே செலுத்த வேண்டும் ; தயாராகும் திட்டம்

நான் பணம் பெறவில்லை. ஆனால், இறுதியில் சிறைக்குச் சென்றது நானே. அது போன்றுதான் பிரதமருக்கு இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நிச்சயமாக, கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் சாமர சம்பத்துக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று பிரதமருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், அவர் பதவி விலக வேண்டும்.

அதேபோன்று, பொலிஸார் பற்றி கூறும்போது முன்னாள் சபாநாயகர் மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன், கஞ்சா கைப்பற்றச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

இதேவேளை, இப்போது ஊடக நிறுவனங்கள் மீது கைவைக்க முயற்சிக்கின்றனர். மேர்வின் சில்வா ஊடகங்கள் மீது கைவைக்கப்போய் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே? இந்த அரசாங்கம் மரங்கொத்தி பறவை போன்று எல்லா மரங்களிலும் கொத்தி வாழைமரத்தில் கொத்தி சிக்கிக்கொண்டது போன்றுதான் ஊடகங்கள் மீது அரசாங்கம் கைவைத்தால் நடக்கும்.

அதனால், ஊடகத்தின் மீது கைவைப்பதை நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். தற்போது மண்சரிவு நிலைமையின் பின்னர் ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளுக்கு என்ன நடந்தது?இன்னும் அதனை வழமைக்கு கொண்டுவர முடியவில்லை.

மஹவ வரையிலேயே அந்த சேவை நடக்கின்றது. அதேபோன்று அனர்த்த நிலைமைகளின் பின்னர் மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட நஷ்டஈடுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்புகளால் மக்கள் அதனை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர்.

முறையாக இது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US