விநாயகர் சதுர்த்தி அன்று அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிக்காரர்கள்
திதிகளில் நான்காவது திதியாக வருவது சதுர்த்தி. இது விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. தடைகள் விலக, வெற்றிகள் கிடைக்க, செல்வ வளம் பெருக சதுர்த்தி தினத்தில் வழிபடுவது சிறப்பு. அன்று விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சதுர்த்தி திதியில் மாலை நேரத்தில் விநாயருக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு, விநாயகருக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த முறையில் விநாயகரை வழிபட்டால் அதிக பலன் கிடைக்கும் என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் "ஓம் வக்ரதுண்டாய ஹூன்" என்ற மந்திரத்தை ஜெபித்து, விநாயகருக்கு வெல்லம் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். சிவப்பு நிற பூக்களைப் படைத்து வழிபடுவது கூடுதல் பலன் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் விநாயகரை, கணபதிக்குரிய ஏதாவது ஒரு மந்திரத்தை சொல்லி, தேங்காய் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் அதிர்ஷ்டம், மன அமைதி ஆகியவை கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் விநாயகரையும், லட்சுமி தேவியையும் சேர்த்து வணங்க வேண்டும். பச்சை நிற ஆடைகள் மற்றும் பாசிப்பருப்பு லட்டுக்களை படைத்து வழிபட்டு, பிறகு அதை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதால் நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் விநாயகரை ஏகதந்த வடிவத்தில் வணங்க வேண்டும். மோதகம், வெண்ணெய், பாயசம் ஆகியவற்றை நிவேதனம் செய்து, வெள்ளி விநாயகர் சிலையை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பேரீச்சம்பழம் அல்லது உலர் பேரீச்சம்பழம் கலந்த பாயசத்தை விநாயகருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் சாதனைகள் படைப்பீர்கள். கனவுகள் நனவாகும். நினைத்த காரியங்கள் கைகூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் விக்னஹர்த்தா வடிவத்தில் இருக்கும் விநாயகரை வணங்க வேண்டும். பச்சை ஆப்பிள்கள், ஏலக்காய், உலர் திராட்சை அல்லது பாசிப்பருப்பு அல்லது பாசிப்பருப்பு மாவால் செய்யப்பட்ட லட்டுக்களை படைத்து வழிபடலாம். இதனால் சவால்களில் இருந்து விடுபடலாம். மனத்தெளிவு கிடைக்கும். வெற்றிகள் குவியும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் விநாயகருக்கு படாஷா மற்றும் லட்டுக்களை படைத்து வணங்க வேண்டும். வெளிர் கிரீம் நிற விநாயகர் சிலையை வழிபட வேண்டும். இதனால் அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல், அமைதி, செல்வ வளம் ஆகியவற்றை ஈர்க்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு வெல்லம் லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். சிவப்பு நிற விநாயகர் சிலையை வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும். சவால்களில் வெற்றி பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சதுர்த்தி நாள் அன்று "ஓம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். விநாயகருக்கு கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். இதனால் செல்வ வளம் பெருகும். துவங்கும் காரியங்களில் சாதனை படைப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் விநாயகரின் சக்தி அம்சத்தை வணங்க வேண்டும். எள் லட்டுக்களை வழங்கினால் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். விநாயகருடன் சனி தேவரையும் சேர்த்து வணங்கினால் வலிமை கிடைக்கும். இதனால் தடைகள் விலகும். நிலைத்தன்மை, வெற்றி ஆகியவை கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் விநாயகருக்கு எள் குட்டா அல்லது எள் இனிப்புகளை படைத்து வழிபடலாம். நீல நிற ஆடைகளை படைக்கலாம். இதனால் உங்களின் திறமை வெளிப்படும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு வாழைப்பழம் மற்றும் கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபட வேண்டும். தாமிரம், பித்தளை அல்லது தங்கத்தாலான விநாயகர் சிலையை வழிபடுவது கூடுதல் பலன் கிடைக்கும். இதனால் செல்வ வளம் கிடைக்கும். இதனால் உள்ளார்ந்த ஞானம் பளிச்சிடும்.