திருக்கேதீஸ்வரத்தில் விகாரை கட்டிய ஞானசாரருக்கு மடுவில் என்ன வேலை ?
திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து விகாரை கட்டிய ஞானசார தேரர் மடு தேவாலய காணிப்பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன் ? என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டிய ஞானசார தேரரிடம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், மடு தேவாலயத்துக்கும் அங்குள்ள 27 குடும்பங்களுக்கும் விவசாயக்காணி தொடர்பில் பிணக்குள்ளது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் காணி எனவும் மடு தேவாலயத்துக்கு 5 ஏக்கர் காணி எனவும் பிணக்கிற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பிணக்கு காணப்பட்ட போது ஞானசார தேரர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அங்கு சென்று தேவையற்ற தலையீடுகளை செய்துள்ளார்.
அவருக்கு மடுவில் என்ன வேலை? திருக்கேதீஸ்வரத்தில் பாரியளவில் காணியை ஆக்கிரமித்து பௌத்த கோவிலை கட்டியவருகு மடு தேவாலய காணிப்பிரச்சினையில் மூக்கை நுழைப்பது ஏன்? எனவும் செல்வம் கேள்வி எழுப்பினார்.
அதோடு விவசாயிகளை வருத்தினால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது எனவும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.